செய்திகள்

ராமாபுரத்தில் விபத்து- தாறுமாறாக ஓடிய லாரி 3 பேரின் உயிரை பறித்தது

Published On 2019-04-21 09:54 GMT   |   Update On 2019-04-21 09:54 GMT
சென்னை ராமாபுரத்தில் பஸ்சுக்கு காத்திருந்த 3 பேர் மீது தறிகெட்டு ஓடிய லாரி மோதியது. இதில் 3 பேரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சென்னை:

சென்னை ராமாபுரம் மியாட் ஆஸ்பத்திரி அருகில் நேற்று இரவு லாரி ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

அப்போது அங்கிருந்த பஸ் நிறுத்தத்தில் 3 பேர் வெளியூர் செல்வதற்காக பஸ்சுக்காக காத்திருந்தனர். தறிகெட்டு ஓடிய லாரி 3 பேர் மீதும் மோதியது.

இந்த விபத்தில் 3 பேரும் லாரியில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் சம்பவ இடத்துக்கு சென்று 3 பேரின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர்கள் கிரு‌ஷ்ணகிரியை சேர்ந்த மூர்த்தி, முரளி, சிவகுமார் என்பதும் சொந்த ஊருக்கு செல்ல பஸ்சுக்கு காத்திருந்த போது விபத்தில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

விபத்து நடந்ததும் லாரியை டிரைவர் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News