செய்திகள்
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் சோதனை- பயணியிடம் ரூ. 2.9 லட்சம் பறிமுதல்
கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணமில்லாததால் பயணியிடம் இருந்து ரூ.2 லட்சத்து90 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
போரூர்:
பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மலர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது மெட்ரோ ரெயிலில் வந்த வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை இசல்தர் தெருவைச் சேர்ந்த மன்னன்கான் என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் இருந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.
இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பொன்மலர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது மெட்ரோ ரெயிலில் வந்த வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை இசல்தர் தெருவைச் சேர்ந்த மன்னன்கான் என்பவரின் பையை சோதனை செய்தனர். அதில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரம் இருந்தது. அவரிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை.
இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கோடம்பாக்கம் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.