செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தால் தகராறு- பெண்ணின் தந்தை கைது

Published On 2019-04-04 13:01 GMT   |   Update On 2019-04-04 13:01 GMT
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணத்தில் ஏற்பட்ட தகராறில் வாலிபரின் தந்தையை தாக்கிய பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள அவதானபட்டி கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முனிராஜ்(50). இவரது மகன் ராஜதுரை. இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த நாராயணன்(40) என்பவரது மகள் கிருஷ்ணவேணியை கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர்களுக்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த நாராயணன் மற்றும் அவரது மனைவி ராதா, மகன்கள் கண்ணன், நாகன் ஆகியோர் முனிராஜியிடம் சென்று நேற்று மாலை தகராறில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் மற்றும் அவரது உறவினர்கள் முனிராஜ் மற்றும் அவரது மனைவி ரத்னா ஆகியோரை சராமாரியாக தாக்கினர். 

இதில் காயமடைந்த முனிராஜ் மற்றும் ரத்னா கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த கே.ஆர்.பி.டேம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News