செய்திகள்

போடி அருகே ஆற்றங்கரையில் பதுக்கிய மணல் மூட்டைகள் பறிமுதல்

Published On 2019-04-02 10:03 GMT   |   Update On 2019-04-02 10:03 GMT
போடி அருகே ஆற்றங்கரையில் பதுக்கிய மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே கொட்டக்குடி ஆற்றங்கரையில் உள்ளது அணை பிள்ளையார் அணை. இந்த பகுதியில் மர்ம நபர்கள் அடிக்கடி மணல் கடத்தி வருகின்றனர். அவர்கள் இரவு நேரங்களில் மூட்டை மூட்டையாக கட்டி கடத்துகின்றனர்.

எனினும் சிலர் சட்டவிரோதமாக ஆற்று மணலை சாக்கு பைகளில் கட்டிவைத்து மோட்டார் சைக்கிள்களில் எடுத்து சென்ற விற்பனை செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் அணை பிள்ளையார் அணைக்கு சென்றனர். அப்போது அங்கு ஏராளமான மணல் மூட்டைகள் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். சுமார் 70 மூட்டைகளில் மணல் அள்ளி வைக்கபட்டு இருந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணல் மூட்டைகளை பதுக்கியவர்கள் யார்? அவர்கள் எங்கு உள்ளனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News