செய்திகள்

மதுரை கூடல்புதூரில் வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2019-03-18 10:23 GMT   |   Update On 2019-03-18 10:23 GMT
மதுரை கூடல்புதூரில் வீட்டுக்குள் புகுந்து நகை -பணம்,பொருட்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மதுரை:

மதுரை கூடல்புதூர் போலீஸ் சரகத்துக்குட்பட்ட மகாத்மாகாந்தி நகர், நர்மதா நதி குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் குட்டிராஜன். இவரது மனைவி இடாஜெயக்குமாரி.

சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் கதவை பூட்டி விட்டு மாடியில் தூங்க சென்று விட்டார். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு, ரூ.70 ஆயிரம் ரொக்கம், ரூ.70 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பினர். காலையில் கீழே இறங்கி வந்த இடாஜெயக்குமாரி கதவு உடைக்கப்பட்டு நகை-பணம், பொருட்கள் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News