செய்திகள்

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை- போதை ஸ்டாம்ப் விற்றவர் கைது

Published On 2019-03-08 07:31 GMT   |   Update On 2019-03-08 07:31 GMT
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை மற்றும் போதை ஸ்டாம்ப் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். #DrugSeller
சென்னை:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கல்லூரி மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

இந்நிலையில் போதை மாத்திரை விற்றதாக சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் கார்த்திக் என்ற வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். பொள்ளாச்சியைச் சேர்ந்த அவரிடம் இருந்து 45 போதை மாத்திரைகள், 30 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விசாரணையில் கல்லூரி மாணவர்களுக்கு அவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.



கைது செய்யப்பட்ட கார்த்திக் யாரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்தார்? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #DrugSeller
Tags:    

Similar News