செய்திகள்

பேரளம் அருகே வழிப்பறி வழக்கில் ரவுடி உள்பட 3 பேர் கைது

Published On 2019-03-05 12:32 GMT   |   Update On 2019-03-05 12:44 GMT
பேரளம் அருகே வழிப்பறி வழக்கில் ரவுடி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே திருமியச்சூர்  கிராமத்தை சேர்ந்தவர் பாடலீஸ்வரன் (வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. ஒரு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் வந்த பாடலீஸ்வரன், நேற்று பேரளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக நண்பர்களுடன் ஒரு காரில் வந்தார்.

அந்த சமயத்தில் திருப்பாம்பரம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 46) என்பவரும் பேரளம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார்.  அப்போது பாடலீஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை வழிமறித்து தான் வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

இதுபற்றி சங்கர், பேரளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்கு பதிவு விசாரணை நடத்தினார். அப்போது பாடலீஸ்வரன், மற்றும் அவரது நண்பர்கள் போலீஸ் நிலைய வாசல் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் அமர்ந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து திரும்பாம்பரம் சங்கரை மிரட்டி வழிப்பறி செய்த ரவுடி பாடலீஸ்வரன், அவரது நண்பர்கள் காரைக்காலை சேர்ந்த கார்த்திகேயன் (26), ரஞ்சித் (23) ஆகிய 3 பேரையும் கைது  செய்தனர்.
Tags:    

Similar News