செய்திகள்

திருச்சியில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-03-04 10:09 GMT   |   Update On 2019-03-04 10:09 GMT
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கே.கே.நகர்:

திருச்சி கே.கே.நகர் சண்முகாநகரை சேர்ந்தவர் சண்முகம், மத்திய பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 52).இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்களின் மகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகாநகரில் உள்ள வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மகனும் தற்கொலை செய்ததால் மகாலட்சுமி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதற்கிடையே மகள் வித்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் தனிமையில் இருந்த மகாலட்சுமிக்கு மேலும் மன உளைச்சல் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று மகன் தற்கொலை செய்த அறைக்கு சென்று மகாலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கே.கே.நகர் போலீசில் அவரது மகள் வித்யா புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News