செய்திகள்

பல்லடத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் என்ஜினீயர்- பெண் பலி

Published On 2019-02-26 10:30 GMT   |   Update On 2019-02-26 10:30 GMT
பல்லடத்தில் நடந்த வெவ்வேறு விபத்தில் என்ஜினீயர், பெண் பலியாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பல்லடம்:

உடுமலை ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 65). என்ஜினீயர். இவரது மனைவி கலைச்செல்வி (60). இவர்கள் சம்பவத்தன்று உடுமலையில் இருந்து கோவைக்கு காரில் புறப்பட்டனர். கார் ஆராக்குளம் என்ற இடத்தில் வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதில் தம்பதி படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு சம்பவம்...

இதேபோன்று இடுவாய் அம்மன் நகரை சேர்ந்த குருசாமி மனைவி ராஜம்மாள் (56). இவரது தம்பி லிங்கசாமியும் மொபட்டில் பல்லடம்- உடுமலை ரோட்டில் சென்றனர். சித்தம்பலம் பிரிவு என்ற இடத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியது. இதில் மொபட்டில் சென்ற 2 பேரும் காயம் அடைந்தனர். பல்லடம் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று கோவையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இதில் சிகிச்சை பலனின்றி ராஜம்மாள் பரிதாபமாக இறந்தார். லிங்கசாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News