கருப்பூர் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை
கருப்பூர்:
சேலம் கருப்பூர் அருகே உள்ள குண்டூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி அம்மா கண்ணு (வயது 48). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
நேற்று அம்மா கண்ணு வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஊரின் அருகே உள்ள ஒரு கிணற்றில் அம்மா கண்ணு பிணமாக மிதந்தார். இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் விசாரிக்கையில், அம்மா கண்ணு குடும்பத்தில் நடந்த பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.