search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karuppur"

    கருப்பூர் அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருப்பூர்:

    சேலம் கருப்பூர் அருகே உள்ள குண்டூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி அம்மா கண்ணு (வயது 48). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. இவர்கள் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

    நேற்று அம்மா கண்ணு வெளியே சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் ஊரின் அருகே உள்ள ஒரு கிணற்றில் அம்மா கண்ணு பிணமாக மிதந்தார். இது குறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் விசாரிக்கையில், அம்மா கண்ணு குடும்பத்தில் நடந்த பிரச்சினை காரணமாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கருப்பூர் பகுதியில் நாளை மறுநாள் பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (23-ந்தேதி) நடைபெறுகிறது. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதி பட்டி, ரெட்டியூர் மற்றும் நகரமலை, அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை சேலம் மேற்கு மின்வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ் வரன் தெரிவித்துள்ளார்.

    கருப்பூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கருப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(24ந்தேதி) நடைபெற உள்ளது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப் பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கர செட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, சாமிநாயக்கன்பட்டி, வெத்தலைக்காரனூர், கோட்டக்கவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்கலம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், 5 ரோடு, குரங்குசாவடி, நரசோதிபட்டி, ரெட்டியூர் மற்றும் நகரமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    ×