செய்திகள்

தஞ்சை அருகே விபத்தில் முதியவர் பலி

Published On 2019-02-12 10:24 GMT   |   Update On 2019-02-12 10:24 GMT
தஞ்சை அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

காரைக்குடி பகுதி ஆத்தங்குடியை சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 83). இவர் தனது மகன் நாராயணனுடன் ஒரு காரில் புறப்பட்டார். காரை நாராயணன் ஓட்டி வந்தார்.

அந்த கார் தஞ்சை அருகே அற்புதாபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக கார் மோதியது. இதில் காரில் இருந்த நாச்சியப்பன் மற்றும் அவரது மகன் நாராயணன் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நாச்சியப்பன் பரிதாபமாக இறந்தார். நாராயணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News