செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் - குஷ்பு

Published On 2019-02-11 05:19 GMT   |   Update On 2019-02-11 05:19 GMT
பாராளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார். #Parliamentelection #DMK #Congress #Kushboo

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்று கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு பிரதமர் மோடி பயந்து போய் உள்ளார். ‘கோபேக் மோடி’ என நாடெங்கிலும் ஒலித்து கொண்டிருக்கிறது. மோடியின் கையாட்டி பொம்மையாக இங்குள்ள அ.தி.மு.க. அரசு உள்ளது.


5 ஆண்டுகளாக மோடி தமிழகத்திற்கு தரவேண்டிய நிதியை தரவில்லை என்கிறார்கள். அப்படியிருக்க எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஏன் மோடியை ஆதரிக்கிறீர்கள்?. தமிழக அரசின் கடன் தொகை ரூ.4 லட்சம் கோடியாக எப்படி உயர்ந்தது?. வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். நடிகர் கமலின் ‘மக்கள் நீதி மய்யம்’ எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று நாங்கள் அழைக்கவில்லை. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் எங்கள் கூட்டணிக்கு வரலாம். கமல் வருவது அவரது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #Parliamentelection #DMK #Congress #Kushboo

Tags:    

Similar News