செய்திகள்

வால்பாறை அருகே டிரைவர் தற்கொலை

Published On 2019-02-09 11:30 GMT   |   Update On 2019-02-09 11:30 GMT
வால்பாறை அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கோவை மாவட்டம் வால்பாறை கஞ்சமலையை சேர்ந்தவர் பத்மநாதன் (வயது 37). டிரைவர். இவரது மனைவி யோகேஸ்வரி. கடந்த வருடம் நடந்த விபத்தில் பத்மநாதன் படுகாயம் அடைந்தார். படுகாயம் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தார். இதனால் குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த பத்மநாதன் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட பத்மநாதனின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசேதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
Tags:    

Similar News