செய்திகள்
தஞ்சை அருகே 1½ வயது மகனுடன் இளம்பெண் மாயம் - போலீசார் விசாரணை
தஞ்சை அருகே 1½ வயது மகனுடன் இளம்பெண் மாயமானதையடுத்து இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சை அருகே உள்ள காசாநாடுபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி உஷா (வயது 24). இவர்களுக்கு பவன்குமார் (1½) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உஷா, தனது மகன் பவன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், மகனுடன் மாயமான மனைவியை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.
பின்னர் இதுபற்றி தஞ்சை தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு காரணமாக மகனுடன் உஷா வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை அருகே உள்ள காசாநாடுபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். விவசாயி. இவரது மனைவி உஷா (வயது 24). இவர்களுக்கு பவன்குமார் (1½) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் சம்பவத்தன்று உஷா, தனது மகன் பவன்குமாருடன் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார், மகனுடன் மாயமான மனைவியை உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.
பின்னர் இதுபற்றி தஞ்சை தாலுகா போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குடும்ப தகராறு காரணமாக மகனுடன் உஷா வீட்டை விட்டு சென்றாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.