செய்திகள்
பாவூர்சத்திரம் அருகே ஓட்டல் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை
பாவூர்சத்திரம் அருகே கடன் பிரச்சினையில் ஓட்டல் அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். (வயது 37). இவர் பாவூர்சத்திரம் பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். சமீபத்தில் இவர் புதுவீடு கட்டி குடியேறினார். இதில் அவருக்கு கடன் ஏற்பட்டது. இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இதில் மனம் உடைந்த ரஞ்சித்குமார் நேற்று வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். சத்தம் கேட்டு அங்கு வந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.