செய்திகள்

தருமபுரி அருகே பொங்கல் நாளில் கட்டிட மேஸ்திரி தற்கொலை

Published On 2019-01-16 16:43 GMT   |   Update On 2019-01-16 16:43 GMT
தருமபுரி அருகே பொங்கல் நாளில் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி:

தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அருகே உள்ள பள்ளக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜாமணி மகன் அர்ஜுணன் (வயது 25). இவர் பெங்களூருவில் கட்டிட மேஸ்திரியாக இருந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.

ஊருக்கு வந்த இவர் இங்கும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் உறவினர்கள் திட்டியதால் மனமுடைந்த இவர் பொங்கல் நாளான நேற்று மாலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த அர்ஜுணனுக்கு பிரியங்கா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
Tags:    

Similar News