புதுக்கடை அருகே விபத்து - வாலிபர் பலி
நாகர்கோவில்:
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 53. இவர் நேற்று மாலை தேங்காய்பட்டினத்தில் இருந்து புதுக்கடை நோக்கி மினி டிம்போவை ஓட்டி வந்து கொண்டிருந்தார்.
அப்போது தேங்காய் பட்டினம் பாலத்தடி அருகே வரும்போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். எதிர்பாராதவிதமாக மினி டெம்போ- மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தூக்கி வீசப்பட்டு 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு கூடி காயம் அடைந்தவர்களை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் மோட்டார் சைக்கிளில் வந்தது கீழ்குளம் பகுதியை சேர்ந்த மெரீன்ராஜ் (22) மற்றும் அவரது நண்பர் வினிஸ் (24) என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினிஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.