செய்திகள்

மின்சார ரெயிலில் கத்தியுடன் சென்னை கல்லூரி மாணவர்கள் மோதல்

Published On 2019-01-11 09:03 GMT   |   Update On 2019-01-11 09:03 GMT
கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மோதலில் ஈடுபட்ட சென்னை கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னேரி:

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது.

இதில் எளாவூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

அவர்கள் கையில் பட்டாக்கத்தி, மதுபாட்டில், பட்டாசு வைத்திருந்தனர். ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையம் வந்தபோது அங்கு தயாராக நின்ற போலீசார் ரகளையில் ஈடுபட்ட 8 மாணவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிபட்டவர்கள் அனைவரும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துகல்லூரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியை பிளாட்பாரத்தில் உரசியபடி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News