என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சென்னை கல்லூரி மாணவர்கள்
நீங்கள் தேடியது "சென்னை கல்லூரி மாணவர்கள்"
கும்மிடிப்பூண்டியில் இருந்து வந்த மின்சார ரெயிலில் மோதலில் ஈடுபட்ட சென்னை கல்லூரி மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பொன்னேரி:
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதில் எளாவூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
அவர்கள் கையில் பட்டாக்கத்தி, மதுபாட்டில், பட்டாசு வைத்திருந்தனர். ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையம் வந்தபோது அங்கு தயாராக நின்ற போலீசார் ரகளையில் ஈடுபட்ட 8 மாணவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்கள் அனைவரும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துகல்லூரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியை பிளாட்பாரத்தில் உரசியபடி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது.
இதில் எளாவூர், கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
அவர்கள் கையில் பட்டாக்கத்தி, மதுபாட்டில், பட்டாசு வைத்திருந்தனர். ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
மாணவர்கள் பட்டாக்கத்தியை காட்டி ரகளையில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்சார ரெயில் மீஞ்சூர் ரெயில் நிலையம் வந்தபோது அங்கு தயாராக நின்ற போலீசார் ரகளையில் ஈடுபட்ட 8 மாணவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பிடிபட்டவர்கள் அனைவரும் சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்துகல்லூரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் சிலர் பட்டாக்கத்தியை பிளாட்பாரத்தில் உரசியபடி சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X