செய்திகள்

குழித்துறை அருகே 2 குழந்தைகளின் தாய் கடத்தல்- வாலிபர் மீது போலீசில் புகார்

Published On 2019-01-05 17:03 GMT   |   Update On 2019-01-05 17:03 GMT
குழித்துறை அருகே 2 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
குழித்துறை:

குழித்துறையை அடுத்த மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 39). டேவிட் அந்த பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உஷா ராணி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினமும் காலையில் டேவிட் பூ விற்பனை செய்ய கடைக்கு சென்று விடுவார். வீட்டில் உஷாராணியும், குழந்தைகளும் மட்டும் இருப்பார்கள்.

டேவிட் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பூ வியாபாரத்திற்கு சென்று விட்டார்.  மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் உஷா ராணி இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் மனைவியை தேடினார். எங்கு தேடியும் உஷா ராணியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் இது பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

போலீசில் டேவிட் அளித்த புகாரில் தனது மனைவி வீட்டில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். அவரை பல இடங்களிலும் தேடினேன். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எனது மனைவியை குழித்துறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருக்கலாம் என கருதுகிறேன். அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவர் தான் என் மனைவியை கடத்தி சென்றிருக்க வேண்டும் என கருதுகிறேன். அவரிடம் இருந்து என் மனைவியை மீட்டு தர வேண்டும். 

இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். 

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து உஷா ராணியை தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News