search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய் கடத்தல்"

    மேலூர் அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கடத்தப்பட்டார். இது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலூர்:

    மதுரை, மேலூர் அருகேயுள்ள மெய்யப்பன் பட்டியைச் சேர்ந்த ராசு மகள் ரவிதா (வயது 19). இவர் மேலூரில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் ரவிதா சம்பவத்தன்று வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது மேலூர் சருகு வளையப்பட்டியைச் சேர்ந்த மனோஜ் (20) என்பவர் திருமண ஆசை காட்டி ரவிதாவை கடத்திச் சென்று விட்டார்.

    இதற்கு மனோஜின் தந்தை வெள்ளைக்கண்ணு, தாய் மலர், உறவினர்கள் செல்வம், நாச்சம்மாள் மற்றும் தங்கம் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக ரவிதாவின் தாய் லட்சுமி கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் மதுரை ஊமச்சிக்குளம் அருகிலுள்ள செல்லாயி புரத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகள் வந்தனா. இவர் நேற்றிரவு டியூசன் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கவுதம், பகத்சிங், விஜய், திருப்பதி, பிரசாந்த், அஜித்பாண்டி ஆகிய 6 பேரும் வந்தனாவை கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.

    இதனை தங்கராஜ் தட்டிக்கேட்டார். எனவே 6 வாலிபர்களும் உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இது தொடர்பாக தங்கராஜ் ஊமச்சிக்குளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் சாந்த மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை அருகே 2 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டது குறித்து கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
    குழித்துறை:

    குழித்துறையை அடுத்த மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் டேவிட் (வயது 39). டேவிட் அந்த பகுதியில் பூக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி உஷா ராணி (30). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தினமும் காலையில் டேவிட் பூ விற்பனை செய்ய கடைக்கு சென்று விடுவார். வீட்டில் உஷாராணியும், குழந்தைகளும் மட்டும் இருப்பார்கள்.

    டேவிட் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழக்கம் போல பூ வியாபாரத்திற்கு சென்று விட்டார்.  மாலையில் வீடு திரும்பிய போது வீட்டில் உஷா ராணி இல்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் மனைவியை தேடினார். எங்கு தேடியும் உஷா ராணியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவர் இது பற்றி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசில் டேவிட் அளித்த புகாரில் தனது மனைவி வீட்டில் இருந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். அவரை பல இடங்களிலும் தேடினேன். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    எனது மனைவியை குழித்துறை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்தி சென்றிருக்கலாம் என கருதுகிறேன். அவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். அவர் தான் என் மனைவியை கடத்தி சென்றிருக்க வேண்டும் என கருதுகிறேன். அவரிடம் இருந்து என் மனைவியை மீட்டு தர வேண்டும். 

    இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். 

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து உஷா ராணியை தேடி வருகிறார்கள்.
    குற்றாலத்தில் மகனுடன் கடைக்கு சென்ற தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குற்றாலம்:

    குற்றாலம் அருகே உள்ள புல்லுக்காட்டுவலசை கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணபெருமாள். இவரது மனைவி சத்யா (வயது 25). இவர்களது மகன் விமல் (4). கடந்த 2 நாட்களுக்கு முன்பு சத்யா தனது மகனுடன் கடைக்கு சென்று வருவதாக கூறிச்சென்றார். அதன்பிறகு சத்யாவையும் அவரது மகன் விமலையும் காணவில்லை.

    இவர்களை யாரேனும் ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து கண்ணபெருமாள், குற்றாலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    2 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் பெண்ணை தேடி வருகிறார்கள்.
    தக்கலை:

    தக்கலை அருகே மருதூர் குறிச்சியை சேர்ந்தவர் செல்வன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விஜிதா (வயது 30). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த 3-ந்தேதி விஜிதா காட்டாத்துறை பகுதியில் உள்ள தனது தந்தை ராசைய்யன் வீட்டிற்கு சென்றார். தந்தை வீட்டில் இருந்து வங்கிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற விஜிதா வீடு திரும்பவில்லை.

    இதையடுத்து அவரது தந்தை ராசைய்யன் மகளை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரில் தனது மகள் விஜிலாவை அவரது சகோதரி கணவரின் உறவினர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டார். அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுத் தரவேண்டும் என்று கூறியிருந்தார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மாயமான விஜிதாவை தேடி வருகிறார்கள். அவரது செல்போன் உதவியுடன் தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    ×