செய்திகள்

ஜனாதிபதி- பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

Published On 2019-01-01 09:27 GMT   |   Update On 2019-01-01 09:27 GMT
2019 புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். #HappyNewyear2019 #RamnathKovind #PMModi
சென்னை:

2019 புத்தாண்டு பிறப்பையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோருக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்துக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில், தங்களுக்கும் தங்கள் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் எனது மகிழ்ச்சியான 2019 புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு அனுப்பிய வாழ்த்து கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

இந்த புத்தாண்டு நன்னாளில் எனது இனிய நல்வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருந்து நீண்ட நாட்கள் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.

இதே போல் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் கொத்துடன் புத்தாண்டு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். #HappyNewyear2019 #Edappadipalaniswami #PMModi #RamnathKovind

Tags:    

Similar News