செய்திகள்

திருவள்ளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2018-12-31 06:59 GMT   |   Update On 2018-12-31 06:59 GMT
திருவள்ளூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அடிக்கடி நடந்து வந்தது. இது குறித்து திருவள்ளூர் டவுண் போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து திருவள்ளூர்-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் டோல் கேட் அருகே டவுன் இன்ஸ்பெக்டர் வெங்கேடசன் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராகிக்குமாரி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்த அவர்கள் கடம்பத்தூரை சேர்ந்த பாபு (30), சுகுமார்(34) என்பதும் அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரிந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின்படி 5 திருட்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு சுமார் ரூ. 2 லட்சம் ஆகும்.

கைதான இருவரும் திருவள்ளூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி உள்ளனர். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து திருவள்ளூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News