செய்திகள்

ஆலங்குளத்தில் மனைவியை சேர்த்து வைக்ககோரி மனு கொடுக்க வந்தவர் கைது

Published On 2018-12-17 14:21 GMT   |   Update On 2018-12-17 14:21 GMT
ஆலங்குளத்தில் மனைவியை சேர்த்து வைக்ககோரி மனு கொடுக்க வந்தவர் உறவினரை தாக்கியதால் அவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள மேலபட்டமுடையார் புரத்தை சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது38). இவரது மனைவி தங்க துரைச்சி. இவர் நர்சாக உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இருவரும் கடந்த ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனிடையே மனைவியை கணவருடன் சேர்த்து வைக்குமாறு சங்கர பாண்டியன் ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மனு கொடுக்க வந்தார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இதுபற்றி விசாரிக்க தங்க துரைச்சியை போலீசார் அழைத்தனர். அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரித்து கொண்டிருந்தனர். 

அப்போது வெளியில் தங்க துரைச்சியின் தாய் மாமன் வெங்குசாமி என்பவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்த்ததும் சங்கர பாண்டியன் உன்னால் தான் என் குடும்பம் பிரிந்து விட்டது என கூறி தாக்கினாராம். இதுபற்றி வெங்குசாமி ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து சங்கர பாண்டியனை கைது செய்தனர்.
Tags:    

Similar News