செய்திகள்
தருமபுரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்- தொழிலாளி பலி
தருமபுரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தருமபுரி:
தருமபுரி பெரிய மல்லிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது36), தொழிலாளி. வெல்லாளப்பட்டி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் பிரவீன்குமார் (25) ஆகிய 2 பேரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பெரியமல்லிப்பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பிரவீன் ஓட்டினார். பின்னால் முருகன் அமர்ந்து இருந்தார்.
அப்போது பெரிய மல்லிப்பட்டி பிரிவு பகுதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த வேடியப்பன் மீது பிரவீன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை முருகன் மட்டும் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.