செய்திகள்
காதலிக்க வற்புறுத்தி மாணவியிடம் வாலிபர் டார்ச்சர்
பிளஸ்-2 மாணவியிடம் வாலிபர், காதலிக்க கூறி டார்ச்சர் செய்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சையை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவியை சேப்பனவாரியை சேர்ந்த 21 வயது நிரம்பிய வாலிபர், ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மாணவியை பார்க்கும் சமயங்களில் எல்லாம், தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தி வந்தாராம்.
இதேபோல் நேற்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாணவியிடம், அந்த வாலிபர் காதலிக்க கூறி தகராறு செய்துள்ளார். இதனால் மாணவியை அவரை கண்டித்து சத்தம் போட்டுள்ளார்.
அப்போது அதை அருகில் நின்றவர்கள் கவனித்து, மாணவியையும், வாலிபரையும் உதவி காவல் மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.
இதற்கிடையே வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை அழுதுக் கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, இன்று கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
தஞ்சையை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவர், பிளஸ்-2 படித்து வந்தார். இந்த மாணவியை சேப்பனவாரியை சேர்ந்த 21 வயது நிரம்பிய வாலிபர், ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
இதனால் மாணவியை பார்க்கும் சமயங்களில் எல்லாம், தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தி வந்தாராம்.
இதேபோல் நேற்று தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாணவியிடம், அந்த வாலிபர் காதலிக்க கூறி தகராறு செய்துள்ளார். இதனால் மாணவியை அவரை கண்டித்து சத்தம் போட்டுள்ளார்.
அப்போது அதை அருகில் நின்றவர்கள் கவனித்து, மாணவியையும், வாலிபரையும் உதவி காவல் மையத்தில் ஒப்படைத்தனர். அங்கு போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி விட்டனர்.
இதற்கிடையே வீட்டுக்கு சென்ற மாணவி, நடந்த சம்பவத்தை அழுதுக் கொண்டே பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை, இன்று கிழக்கு போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் விசாரித்தனர். பிறகு அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews