பல்லடத்தில் மில் தொழிலாளி விபத்தில் பலி
பல்லடம்:
பல்லடம் ஊஞ்சப் பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 52). மில் தொழிலாளி. நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு மொபட்டில் புறப்பட்டார். பூமலூர் மெயின்ரோடு காளிவேலம்பட்டி பிரிவில் உள்ள 4 ரோடு சந்திப்பு வந்தபோது மொபட் நிலைதடுமாறி அங்குள்ள ஒரு பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் சேகர் படுகாயம் அடைந்தார். பல்லடம் போலீசார் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோன்று இதே பகுதியை சேர்ந்தவர் அன்பரசு (35). ஆட்டோ டிரைவர். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். பல்லடம் கொசவம்பாளைம் பிரிவு அருகே சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் அன்பரசு மீது மோதியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.