செய்திகள்

சமையல் செய்த போது தீயில் கருகி இளம்பெண் பலி

Published On 2018-12-07 13:34 GMT   |   Update On 2018-12-07 13:34 GMT
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே சமையல் செய்த போது எதிர் பாராதவிதமாக பெண்ணின் சேலையில் தீ பிடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சித்தையன்கோட்டையைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 40). டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் பிரியா (35) என்பவருக்கும் 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் 2 மகன்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று பிரியா தனது வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது எதிர் பாராதவிதமாக அவரது சேலையில் தீ பிடித்தது.

பலத்த தீக்காயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து செம்பட்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் ராதிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News