செய்திகள்
சமையல் செய்யாததால் பெண்ணை கொல்ல முயற்சி- கணவர் கைது
சுவாமிமலை அருகே சமையல் செய்யாததால் மனைவி கொல்ல முயற்சி செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள தீமாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39) இவரது மனைவி நிர்மலா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ஏன் சமையல் செய்யவில்லை என நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது முருகானந்தம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசி ஐயா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்ற முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
சுவாமிமலை அருகே உள்ள தீமாங்குடி கிராமத்தில் வசிப்பவர் முருகானந்தம் (வயது 39) இவரது மனைவி நிர்மலா (28). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகானந்தம் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ஏன் சமையல் செய்யவில்லை என நிர்மலாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது முருகானந்தம் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து நிர்மலா மீது ஊற்றி தீவைத்து விட்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப்-இன்ஸ்பெக்டர் காசி ஐயா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து கொலை செய்ய முயன்ற முருகானந்தத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews