செய்திகள்
மாதவரத்தில் போலீஸ்காரரிடம் ‘வாக்கிடாக்கி’ திருட்டு- 3 பேர் கைது
மாதவரத்தில் போலீஸ்காரரிடம் வாக்கிடாக்கி திருடி சம்பவத்தில் ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாதவரம்:
மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர் மாதவரம் பால்பண்ணை எம்.எம்.டி.ஏ. பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்குள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் நின்ற போது போலீஸ்காரர் கருப்பசாமியிடம் இருந்த வாக்கி டாக்கி மாயமானது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ‘வாக்கி டாக்கி’ பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
மாதவரம் பால்பண்ணை போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் கருப்பசாமி. இவர் மாதவரம் பால்பண்ணை எம்.எம்.டி.ஏ. பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அங்குள்ள ஆட்டோ நிறுத்தும் இடத்தில் நின்ற போது போலீஸ்காரர் கருப்பசாமியிடம் இருந்த வாக்கி டாக்கி மாயமானது. அதனை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ‘வாக்கி டாக்கி’ பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews