செய்திகள்

காதலிக்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை

Published On 2018-12-05 10:19 GMT   |   Update On 2018-12-05 10:19 GMT
காதலை ஏற்க மறுத்த பிளஸ்-2 மாணவியை கொடூரமாக கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
திருவள்ளூர்:

மணலிபுதுநகரைச் சேர்ந்தவர் அனுபாரதி (வயது17). தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இவரது வீட்டின் அருகே தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்த ஜெயராமன் தங்கி இருந்தார். அவர் அனுபாரதியை ஒரு தலையாக காதலித்தார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் காதலை ஏற்க மறுத்த அனுபாரதியை கொடூரமாக குத்தி ஜெயராமன் கொலை செய்தார். இந்த வழக்கு திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இன்று காலை நீதிபதி பரணிதரன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அப்போது மாணவியை கொலை செய்த ஜெயராமனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தனலட்சுமி ஆஜர் ஆனார். #tamilnews
Tags:    

Similar News