செய்திகள்
கடவூர் அருகே உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த பெண் மனமுடைந்த தற்கொலை செய்து கொண்டார்.
முசிறி:
கடவூர் நல்லுரான் பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி லட்சுமி (வயது 48). இவர் கடந்த பல வருடங்களாக உடல்நலம் சரியில்லாமல் அவதிபட்டு வந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை எடுத்து குடித்தார். உடனே அவரை சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி இறந்தார்.
இது குறித்து பாலவிடுதி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.