செய்திகள்

லோக் ஆயுக்தா பணி தொடக்கம்- தமிழக அரசு அறிவிப்பாணை வெளியீடு

Published On 2018-11-29 09:20 GMT   |   Update On 2018-11-29 09:20 GMT
தமிழகத்தில் லோக் ஆயுக்தா பணி தொடங்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. #LokAyukta
சென்னை:

மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தா தொடங்குவது குறித்து ஏற்கனவே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

அதில் ‘‘தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளது, லோக் ஆயுக்தாவின் செயலாளர், இயக்குநர், சார்பு செயலாளர் உள்ளிட்ட 26 பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த நபர்களை லோக் ஆயுக்தாவின் தலைவர் தேர்வு செய்வார்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokAyukta
Tags:    

Similar News