செய்திகள்
உடைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை

ஆரணி அருகே எம்ஜிஆர் சிலை உடைப்பு- அதிமுகவினர் மறியல்

Published On 2018-11-26 12:21 GMT   |   Update On 2018-11-26 12:21 GMT
ஆரணி அருகே எம்.ஜி.ஆர். சிலை உடைப்பை கண்டித்து அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபப்பு ஏற்பட்டது.

ஆரணி:

ஆரணி அடுத்த பெரணமல்லூர் குருக்காத்தூர் கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவப்பட்டுள்ளது. நேற்று இரவு மர்ம நபர்கள் எம்.ஜி.ஆர். சிலையின் கை பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று காலையில் சிலை உடைக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் திடுக்கிட்டனர். இதுபற்றி தகவலறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

அவர்கள் சிலையை உடைத்தவர்களை கண்டுபிடித்து உடனே கைது செய்ய வலியுறுத்தி வாழைப்பந்தல் செல்லும் மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினர்

 

பெரணமல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிலையை உடைத்தவர்கள் கைது செய்யப்படுவார்கள் என உறுதி அளித்தனர். இதனையடுத்து, அ.தி.மு.க.வினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #ADMK

Tags:    

Similar News