செய்திகள்

நாகை, திருவாரூர், புதுக்கோட்டையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

Published On 2018-11-23 14:29 GMT   |   Update On 2018-11-23 14:29 GMT
கஜா புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
சென்னை:

வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
Tags:    

Similar News