செய்திகள்

மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு வேலை- விசா கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

Published On 2018-11-19 12:00 GMT   |   Update On 2018-11-19 12:00 GMT
கோவை வாலிபருக்கு மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தும் லண்டன் செல்ல விசா கிடைக்காத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:

கோவை போத்தனூரை சேர்ந்தவர் ரீகன்(வயது30).

பட்டதாரியான இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு முதுகலை படிப்புக்காக லண்டன் சென்றார். அங்குள்ள ஒரு கல்லூரியில் தங்கி படித்த இவர் பகுதி நேரமாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் இவரது சான்றிதழ்கள் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்துக்கும், ரீகனுக்கும் இடையேயான வழக்கு 3 வருடங்களாக நடந்தது.

இந்த வழக்கில் ரீகன் வெற்றி பெற்றார். இதையடுத்து ரீகன் மீண்டும் லண்டனில் வேலைக்கு செல்ல தயாரானார். அவருக்கு அங்குள்ள ஒரு நிறுவனத்தில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்துக்கு வேலை கிடைத்தது.ஆனால் பல மாதங்களாகியும் ரீகனுக்கு விசா கிடைக்கவில்லை.

இதனால் அவருக்கு கிடைத்த வேலையும் பறிபோனதாக கூறப்படுகிறது. இது ரீகனுக்கு மிகவும் மனவேதனையை ஏற்படுத்தியது.

கடந்த 14-ந் தேதி இரவு வீட்டில் இருந்த அவர் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அதிர்சியடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News