செய்திகள்

குமரி மாவட்டத்தில் மலையோர பகுதியில் சாரல் மழை - அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-11-19 09:46 GMT   |   Update On 2018-11-19 09:46 GMT
குமரி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மலையோர பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 26.60 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 506 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 84 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 245 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் சிற்றாறு-1 அணைக்கு 179 கனஅடி தண்ணீரும், மாம்பழத் துறையாறு அணைக்கு 26 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டிருக்கிறது.

மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-18.2, சிற்றாறு 1-16, சிற்றாறு 2-11, நாகர்கோவில்-2.4, பூதப்பாண்டி-1, ஆரல்வாய் மொழி-6, பாலமோர்-10.8, திற்பரப்பு-12.6.திற்பரப்பு அருவியில் விடுமுறை தினமான நேற்று அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர். இந்த தொடர் மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பல குளங்கள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
Tags:    

Similar News