செய்திகள்

கஜா புயல் பாதிப்பு - முதல்வரிடம் கேட்டறிந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Published On 2018-11-19 05:52 GMT   |   Update On 2018-11-19 05:52 GMT
வியட்நாமில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கஜா புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். #GajaCyclone #RamnathGovind #EdapapdiPalaniswami
சென்னை:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வியட்நாம்  மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.

இன்று வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



இந்நிலையில் வியட்நாமில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கஜா புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக கஜா புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் முதலமைச்சரிடம் கேட்டறிந்தனர். #GajaCyclone #RamnathGovind #EdapapdiPalaniswami
Tags:    

Similar News