செய்திகள்

உத்தமபாளையம் அருகே அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை

Published On 2018-11-18 17:49 GMT   |   Update On 2018-11-18 17:49 GMT
உத்தமபாளையம் அருகே அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உத்தமபாளையம்:

உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையன்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். அவருடைய மனைவி ஜெயகீதா (வயது 40). இவர், வீரபாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராயப்பன்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயகீதா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News