செய்திகள்
உச்சிப்புளி அருகே அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
உச்சிப்புளி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சாத்தக்கோன்வலசையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது44). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பிரப்பன்வலசைக்கு நடந்து சென்றார்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமக குமரேசன் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த குமரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா வழக்குப்பதிவு செய்து கமுதி கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் வழிவிட்டான் என்பவரை கைது செய்தார்.