செய்திகள்
கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கியது - வானிலை மையம்
கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
சென்னை:
கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். 16 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது கஜா புயல்.
கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரி கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. மேலும் புயலின் மையப் பகுதி கரையைத் தொடும்போது காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. #GajaStorm
கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். 16 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது கஜா புயல்.
கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
புதுச்சேரி கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது. மேலும் புயலின் மையப் பகுதி கரையைத் தொடும்போது காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. #GajaStorm