search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "touch the shore"

    கஜா புயலின் முழுப்பகுதி நிலப்பரப்பிற்கு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
    சென்னை:

    கஜா புயலின் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்தில் குறையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக அதிராமபட்டினத்தில் 111 மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது. கஜா புயலின் முழுப்பகுதி நிலப்பரப்பிற்கு வர இன்னும் 2 மணி நேரம் ஆகும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடந்தவுடன் எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலின் கண்பகுதி 26 கிமீ விட்டம் கொண்டது.  மேலும் புயல் நகரும் திசையில் காற்றின் வேக மாறுபாட்டால் கஜா கரையை கடப்பதில் தாமதம் ஏற்பட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

    புயல் பாதிப்பு குறித்து காலையில்தான் முழுமையாக தெரியவரும் என வானிலை மைய இயக்குநர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார்.   நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய புயல்  தற்போது கஜா புயல் கரையை கடந்து வருகிறது.

    கஜா புயல் கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 100 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது.  இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.   நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    கஜா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் மீட்பு பணியினர் இரவோடு இரவாக பல இடங்களில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே புயல் கரையை கடந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கும் என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    அரசின் அறிவிப்பு வரும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் அமைச்சர் உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   #GajaStorm
    கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடந்தவுடன் எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 2 மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  புயலின் கண்பகுதி கரையை கடந்தாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது.  இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.   நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் மீட்பு பணியினர் இரவோடு இரவாக பல இடங்களில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே புயல் கரையை கடந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கும் என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசின் அறிவிப்பு வரும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   #GajaStorm
    கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே பாதியளவு கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயலின் கண்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே பாதியளவு கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

    கஜா புயலின் கண்பகுதியில் பாதியளவு கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது.  மேலும் புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 2 மணி நேரம் ஆகும்  என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது.   நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. 

    புயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனினும் மீட்பு பணியினர் பல இடங்களில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே புயல் கரையை கடந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கும் என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.  மேலும் பலத்த காற்று வீசி வருவதால் பாம்பன் பாலத்தில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.  #GajaStorm
    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    கஜா  புயலின் கண்பகுதி 26 கி.மீ. விட்டம் கொண்டது என வானிலை மையம் அறிவித்தது.  தீவிர புயலாகவே கஜா புயல் கடந்து வருவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. 


    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கிய நிலையில் புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து வேகமாக காற்று வீசி வருகிறது.



    கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.  மேலும் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளது. அவற்றை அகற்றும் முயற்சியில் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.



    புதுச்சேரி கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.  மேலும் புயலின் மையப் பகுதி கரையைத் தொடும்போது காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   நாகை வேதாரண்யத்தில் மிகுந்த பலந்த காற்று வீசி வருகிறது.  பலத்த காற்று காரணமாக தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மறு அறிவிப்பு வரும்வரை மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  #GajaStorm
    கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயலின் முன்பகுதி வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்க தொடங்கி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  16 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது கஜா புயல்.  

    கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.  தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    புதுச்சேரி கடலோர பகுதிகளில் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசி வருகிறது.  மேலும் புயலின் மையப் பகுதி கரையைத் தொடும்போது காற்றின் வேகம் படிப்படியாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   #GajaStorm
    கஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. #GajaStorm
    சென்னை:

    கஜா புயல் அடுத்த ஒரு மணிநேரத்தில் வேதாரண்யம் - நாகை இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரையைக் கடக்கும் போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும், சில சமயங்களில் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.  16 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  மேலும் தீவிரப் புயலாகவே கரையைக் கடக்க இருக்கிறது கஜா புயல்.  

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.  இந்நிலையில் நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   #GajaStorm
    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். #GajaStorm
    சென்னை:

    இன்று இரவு எட்டு மணி முதல் 11 மணிக்குள் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    கஜா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 320 கி.மீ. - நாகைக்கு வடகிழக்கே 300 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது. கஜா புயலின் வேகம் மணிக்கு 18 கிலோ மீட்டரில் இருந்து 17 கிலோ மீட்டராக குறைந்துள்ளது என  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இந்நிலையில், கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது என சென்னை வானிலை மைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்துக்கு 138 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இந்த புயல் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    கஜா புயலின் வெளிப்பாகம் கரையை தொட தொடங்கியுள்ளது. கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டராக உள்ளது. புயலின் வேகம் படிப்படியாக அதிகரித்து 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை பலத்த காற்று வீசும். 

    புயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. #GajaStorm
    ×