செய்திகள்

ராமநாதபுரம் அருகே கோவிலுக்குள் புகுந்து பெண்ணிடம் 12 பவுன் பறிப்பு

Published On 2018-11-15 14:43 GMT   |   Update On 2018-11-15 14:43 GMT
ராமநாதபுரம் அருகே கோவிலுக்குள் சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் 12 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் அருகே மேலக்கோட்டையை அடுத்துள்ள மாயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி பாலாமணி (வயது 55).

இவர் சம்பவத்தன்று பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தர்மமுனீஸ்வரர் கோவிலுக்குச் சென்றார்.

அங்கு அவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது பின்புறமாக வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று பாலாமணி கழுத்தில் கிடந்த 12 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் உச்சிப்புளி அருகே உள்ள ஆக்கடாவலசையைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மனைவி நாகவள்ளி (52). இவர் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது உள்ளே புகுந்த மர்ம நபர்கள் நாகவள்ளி கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாயராஜலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நகை பறிப்பில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த மலைராஜ் (35), பிரபாகரன் (28) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News