செய்திகள்

சேகர்பாபு தந்தை மரணம்- முக ஸ்டாலின் அஞ்சலி

Published On 2018-11-13 09:22 GMT   |   Update On 2018-11-13 09:22 GMT
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபுவின் தந்தை உடலுக்கு மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். #DMK #MKStalin
சென்னை:

சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பி.கே.சேகர் பாபு எம்.எல்.ஏ.யின் தந்தை பி.கிருஷ்ண சாமி. இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியரான இவர் ஓட்டேரி நாராயண மேஸ்திரி தெருவில் வசித்து வந்தார்.

உடல் நலக்குறைவால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணசாமி இன்று காலை காலமானார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விரைந்து சென்று கிருஷ்ணசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சேகர்பாபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், எவ.வேலு, எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி, ஜெ.அன்பழகன், ரவிச்சந்திரன் மற்றும் வி.ஜி.ராஜேந்திரன், ஆர்.டி. சேகர் உள்பட பகுதி மற்றும் வட்ட செயலாளர்கள் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கிருஷ்ணசாமிக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும் தேவராஜ், சேகர் பாபு என்ற 2 மகன்களும் பிரமிளா, லதா, சுமதி, காந்திமதி என்ற 4 மகள்களும் உள்ளனர். இறுதி சடங்கு ஓட்டேரி இடுகாட்டில் நாளை (புதன்) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.
Tags:    

Similar News