செய்திகள்
கோவை அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை செல்வபுரம் அருகே உள்ள செட்டிவீதி அசோக்நகரை சேர்ந்தவர் சபீர்அலி. இவரது மனைவி மவுலானா சாத்தூன் (வயது 25). சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த இவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து செல்வபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மவுலானா சாத்தூனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மவுலானா சாத்தூன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.