செய்திகள்
திருவாரூரில் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்:
திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 50). விவசாயி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது சகோதரர் இறந்து விட்டார். இதில் மனமுடைந்த நிலையில் இருந்த அருணாசலம் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி அருணாசலத்தின் மகள் லாவண்யா திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.