செய்திகள்

அரியாங்குப்பத்தில் காதல் திருமணம் செய்தபெண் தீக்குளித்து தற்கொலை

Published On 2018-10-22 11:44 GMT   |   Update On 2018-10-22 11:44 GMT
அரியாங்குப்பத்தில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் சார்லஸ். இவர் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சரண்யா (வயது28). இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக சரண்யா எதையோ பறிகொடுத்தது போல் விரக்தியுடன் இருந்து வந்தார். அவருக்கு சார்லஸ் ஆறுதல் கூறி சில நாட்களில் அனைத்தும் சரியாகிவிடும் என்று சமாதானபடுத்தி வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் முழுவதும் தீபரவியதால் வலி தாங்காமல் சரண்யா அலறினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து சரண்யாவை புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை சரண்யா பரிதாபமாக இறந்து போனார்.

இதகுறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News