செய்திகள்

தேனி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2018-10-20 09:42 GMT   |   Update On 2018-10-20 09:42 GMT
தேனி அருகே 2 குழந்தைளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி:

தேனி அருகே உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் எழுவம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகள் சுமிதா (வயது29). இவருக்கும் கூடலூரை சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

எஸ்வந் என்ற மகனும் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுமிதா கோபித்துக்கொண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விட்டார்.

சம்பவத்தன்று குழந்தைகளுடன் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக சுமிதா கூறி சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை எங்கு தேடியும் கிடைக்காததால் ராயப்பன்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News