செய்திகள்
வெள்ளகோவில் அருகே டெம்போ மோதி தொழிலாளி பலி
வெள்ளகோவில் அருகே டெம்போ மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவிலை சேர்ந்தவர் தங்கவேல்(வயது 58). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
பழைய பஸ் நிலையம் அருகே வந்த போது அவ்வழியாக வந்த டெம்போ இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு இறந்தார். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.